Wednesday 25 December 2013

!!!! சிந்தனை செய் மனமே !!!!

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்.

மாடு முட்டிய தென்று திரும்ப முட்டுபவர் மனிதரில்லை
அறிவிலாதவர் திட்டுகிறாரென்று திரும்ப திட்டுபவர் அறிஞரில்லை

எத்தனை காற்று வந்தாலும் கல்தூண்கள் கலங்குவதில்லை
எத்தனை தூற்று வந்தாலும் நல்லவர்கள் கலங்குவதில்லை

போற்றும் மாலைகளுக்கு தலை குனிந்து சேவை செய்
தூற்றும் தூசுகளுக்கு தலை குனிய தேவையில்லை

பொருளுள்ளவர்கள் பிறர் அன்பை பன்பை பொருட்படுத்துவதில்லை
அருளுள்ளவர்கள் பிறர் குறையை குற்றத்தை பொருட்படுத்துவதில்லை

சிலரது பார்வை பூதக்கண்ணாடி போல குறைகளை மிகைபடுத்தும்
சிலரது பார்வை மூக்குகண்ணாடி போல நெருக்கமாக இருக்கும்

போற்றித் தரும் பரிசையும் தூய்மையால் மறுத்துவிடு
அது போற்றுபவரிடமே திருப்பிச் செல்லும்
தூற்றி வையும் வசவையும் தூசு போல் தட்டிவிடு
அது தூற்றுபவரையே ஒட்டிக் கொள்ளும்

உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
சகிப்பு தன்மையை பயந்து விட்டதென எண்ணக் கூடாது

மன்னிக்கிறவர் புனிதராவார்
மன்னிக்கப்படுபவர் மனிதராவார்
தண்டிக்கிறவர் மிருகமாவார்
தண்டிக்கப்படுபவர் கயவராவார்

No comments:

Post a Comment